இங்கிலாந்து இலங்கைக்கு கைகொடுப்பதாக உறுதி

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோருக்கிடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன் போது நாட்டின் நிலையினை பிரதமர் ரணில் விளக்கியதாகவும், தம்மால் இயன்ற உதவியினை வழங்குவதாக இங்கிலாந்து பிரதமர் உறுதியளித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

நேற்று(30.05) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் போது “காலநிலை மாற்றத்தை சமாளிப்பது, ஏற்றுமதி மூலமாக பொருளாதர வளர்ச்சிக்கு கைகொடுப்பது” போன்ற விடயங்களில் உதவிகளை வழங்குவதாக இங்கிலாந்து பிரதமர் கூறியதாக ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து இலங்கைக்கு கைகொடுப்பதாக உறுதி

Social Share

Leave a Reply