போராட்டக்காரர்கள் கைப்பற்றி வைத்துள்ள இடங்களிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளனர். இருப்பினும் காலி முகத்திடல் போராட்ட காரர்களாக தாம் ஜனாதிபதி செயலகத்தை, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி விலகும் வரை மீள வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய இடங்களிலிருந்து வெளியேறுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த இடங்களில் உள்ள அனைவரையும் வெளியேறுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர் பதவியிழந்துள்ளாரா என சபாநாயகர் சட்ட ஆலோசனை பெறுவதாக அறிவித்த நிலையிலேயே போராட்ட காரர்கள் இந்த முடிவினை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை சட்ட தரணிகள் சங்கம், இந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு தொடர்ச்சியாக அறிவுறுத்தல் வழங்கி வந்த நிலையில், நேற்றைய தினம் உடனடியாக வெளியேறாவிட்டால் தாம் போராட்டக்காரர்களுக்கு வழங்கும் ஆதரவினை வாபஸ் பெறுவதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
