ஜனாதிபதியை சந்திக்கவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரநிதிகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக அதன் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். அத்துடன் நாளைய தினம் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும், ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்து கொள்ளுமெனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆகஸ்ட் 11ம் திகதி நேரடியாக சந்தித்து மலையக தமிழ் இலங்கையர்களின் அபிலாசைகள் தொடர்பில் குறிப்பாகவும், தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களின்  பிரச்சினைகள் தொடர்பில் பொதுவாகவும் கலந்துரையாடும்.

“பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம் ஒன்றினை செயல்படுத்துதல்” தொடர்பில், ஜனாதிபதி தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு விடுத்துள்ள அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெறும்” என பி[பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி

Social Share

Leave a Reply