எதிர்வரும் 19ஆம் திகதியை விஷேட அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
மேலும், அன்றைய தினம் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.