உண்ணாவிரதத்தை கைவிட சட்ட மா அதிபரின் உறுதிமொழியினை கோரும் கைதிகள் – மனோ

கொழும்பு மகசின் சிறையில் 13 தமிழ் கைதிகள், உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள்.  உண்ணாவிரதத்தை கைவிட, சட்ட மாஅதிபரின் தலையீட்டு உறுதிமொழியை   கோருகிறார்கள் என மகசின் சிறைக்குள்ளே சென்று தமிழ் கைதிகளை சந்தித்து விட்டு வெளியே வந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களிடம் நேற்று(14.09) ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“அரசாங்கத்தின் அறிவுறுத்தல் இன்றி, சட்டமா  அதிபர் தலையிட மாட்டார் என அவர்களுக்கு  சொன்னேன். 
ஆகவே ஜனாதிபதியுடன் அண்மையில் இவ்விவகாரம் பற்றி நடத்திய பேச்சு விவரங்களை கூறினேன் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

“தேசிய இனப்பிரச்சினைக்கு  அரசியல் தீர்வு வருவதற்கு முதல் காத்திரமான நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடப்பாடு ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கிறது  என வலியுறுத் தி உள்ளேன்.

இவ்வரிசையில் முதல் நடவடிக்கையாக அரசியல் கைதிகள் விடுதலையையே நாம் கருதுகிறோம்.

எஞ்சியிருக்கும் தமிழ் கைதிகளை பிணை, வழக்கு வாபஸ், பொதுமன்னிப்பு ஆகிய முறைகளில்  விடுவிக்கும் காலம் உதயமாகி விட்டது. நம்பிக்கையுடன் இருக்கும்படி வலியுறுத்தினேன்” என ஊடகவியலாளர்களுக்கு மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply