வவுனியாவில் கொவிட நிவாரண பணி

வவுனியா, கச்சக்கொடியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வவுனியா வைரவர் புளியங்குளம். ரோயல் லீட் ஆங்கில பாடசாலையின் (Royal Lead English School ) அதிபர் கலாநிதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் இந்த நிவாரண பொதிகளை மக்களுக்கு கையளித்தார்.

3,500 ரூபா பெறுமதியான 30 பொதிகள் இன்று(29.09) வயோதிப குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களிலும் கலாநிதி கீதாஞ்சலியினால் பல உதவி திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களிலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply