நாம் திட்டிய ரணில் இப்போ சரியான பாதையில் எம்மோடு – புகழும் மஹிந்த

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தம்மோடு இணைந்து சரியான பாதையில் பயணிப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“அவர் ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும், எம்மோடு இணைந்து பயணிக்கிறார். அவருக்கு ஆதரவு வழங்கி நாட்டை முன் கொண்டு செல்ல அவரோடு இணைந்து செயற்படுங்கள்” என தனது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்தவர்களுக்கு கோரிக்கை முன் வைத்துள்ளார்.

“முன்பு ரணிலை நாம் திட்டுவோம். தற்போது அவரை சரியான பாதைக்கு வந்துள்ளமையினால் அவரை போற்றுகிறோம்” எனவும் மஹிந்த களுத்துறையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply