வெலிமடை, சில்மியாபுர பிரதேசத்தில் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
நேற்று (01.01) பிற்பகல் குழந்தையின் வீட்டிற்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
என். எஸ். ஹமீதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
வீட்டை சுற்றி விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சிறிது நேரத்தின் பின்னர் தேடியபோது, அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பிரதேசவாசிகளின் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்ட போதிலும், ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கப்பேட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.