இந்த ஆண்டில் அதிக சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை!

இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே 47,353 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

கடந்த 1ம் திகதி முதல் 15ம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிக எண்ணைக்கையிலான சுற்றுலா பயணிகள் ரஷ்யாவிலிருந்தே நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 12,064 ஆக பதிவாகியுள்ளது.

மேலும், இந்தியாவில் இருந்து 5,838 பேரும், ஜேர்மனியில் இருந்து 3,945 பேரும், பிரித்தானியாவில் இருந்து 3,862 பேரும், பிரான்சில் இருந்து 2,241 பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாததிற்குள் 105,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு.பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் அதிக சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை!

Social Share

Leave a Reply