மார்ச் 1ம் திகதி ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பல துறைகளில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று(06.02) பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, எரிபொருள், மின்சாரம், துறைமுகம், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட பல பொதுத் துறைகளின் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
