நேற்று (19.02) மாலை அங்குலான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனித சவேரியார் தேவாலயத்திற்கு அருகில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்குலான மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனது மாமாவின் வீட்டிற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவரின் மாமாவும் படுகாயமடைந்து லுனாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் பழைய முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இடஙக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பொலிஸாரால் அடையாளங்காணப்பட்டுள்ளனர், எனினும் சந்தேகநபர்கள் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை அங்குலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
