நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு மக்களின் மனித உரிமை மீறல் என சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கமே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சுகாதார செயலாளர், மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபை ஆகியோர் பெயரியிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டின் பொது சுகாதார சேவை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் திரு.உபுல் ரோஹன கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துல்லமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
