மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தந்துவ பகுதியில் நேற்று (02.04) பிற்பகல் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் பத்தந்துவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவருக்கும் அவர் தற்காலிகமாக வசித்து வந்த வீட்டின் உரிமையாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கூரிய ஆயுதத்தால் கழுத்தில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.