வெல்லவாய – நுகயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று காயமடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லவாய-தனமல்வில வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த கெப் வண்டியுடன் மோதியதாலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான 44 வயதான பொலிஸ் சார்ஜன்ட், அவரது 42 வயதுடைய மனைவி மற்றும் 70 வயதுடைய தந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளதுடன், 11 வயது பிள்ளை படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் குடிபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.