திருகோணமலை கந்தளாயில் இன்று(07.04) புகையிரதம் தடம் புராணத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை அக்போபுர புகையிரத நிலையத்துக்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கல் ஓயாவிலிருந்து, திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி இரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக புகையிரத நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றான.
மூன்று பெட்டிகள் தடம் புரண்டு நிலத்தில் வீழ்ந்துள்ளமையினாலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் மூன்று இரயில் கட்டுப்பாட்டாளர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத பாதை கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதன் காரணமாக புகையிரத போக்குவரத்துக்கு பாத்திக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
