வவுனியா சிறையில் இருந்து 15 பேர் விடுவிப்பு!

வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யப்பட்டனர்.

இன்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 988 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இன்று விடுவிக்கப்பட்டனர்

இதேவேளை இன்று (05.05) மற்றும் நாளை (06.05) ஆகிய தினங்களில் சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சிறையில் இருந்து 15 பேர் விடுவிப்பு!

வவுனியா சிறையில் இருந்து 15 பேர் விடுவிப்பு!

வவுனியா சிறையில் இருந்து 15 பேர் விடுவிப்பு!

Social Share

Leave a Reply