வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக நாளை (10.05) புயலாக உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த அமைப்பு காரணமாக 02 -15 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 85 , 100 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை காணப்படும் எனவும் சில சமயங்களில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரையிலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி படகுகளில் இருப்பவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிக மழை பெய்யும் மற்றும் பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply