கிரேட் வெஸ்டன் மற்றும் வடகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் நேற்று (12.05) ரயில் தடம் புரண்டதால், பிற்பகல் முதல் ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
இதன் காரணமாக மலையக புகையிரத பாதையில் ஹெட்டனுக்கும் நானுஓயாவிற்கும் இடையிலான புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த போக்குவரத்து சேவை இதுவரையில் வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தடம் புரண்ட புகையிரதம் இதுவரை சரி செய்யப்படவில்லை எனவும், இதன் காரணமாக கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் மற்றும் பதுளையில் இருந்து நானுஓயா நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகையிரத நிலையங்களுக்கு இடையில் பஸ் மூலம் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.