டெபிட் அட்டையை திருடி நகை வாங்கிய பெண் கைது!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் டெபிட் அட்டையை திருடி அந்த அட்டையை பயன்படுத்தி தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய பெண் ஒருவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது அட்டையைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து 2 வளையல்கள், 1 மாலை மற்றும் 2 காதணிகள் உட்பட பல தங்க நகைகள் மற்றும் பல பொருட்களை அடகு வைத்த பற்றுச்சீட்டு ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply