மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கு அமைவாக மருந்துப் பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஜூன் 15ம் திகதி முதல் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி மருந்துகளின் விலை 16% குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply