கிழக்கு மாகாண சுற்றுலா துறை பணிப்பாளராக முன்னாள் ஊடகவியலாளர்

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளராக முன்னாள் ஊடகவியலாளர் A.P மதன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் ஆளுநரினால் நேற்றைய தினம் வழங்கப்பட்டிருந்தது.

மதன் இன்று(14.06) தனது கடமைகளை அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டார். பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டவர் கிழக்கு மாகாண சுற்றுலா துறை தொடர்பில் அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தார்.

Social Share

Leave a Reply