ஜப்பானிய மொழியை பாடத்திட்டத்தில் கொண்டுவருவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்தே பாடத்திட்டத்தின் ஊடாக ஜப்பானிய மொழியை பயிற்றுவிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (22.06) விசேட அறிக்கையொன்றை முன்வைத்து உரையாற்றிய அமைச்சர் மனுஷ நாணயகார, அமைச்சரவையின் ஊடாக இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எதிர்காலத்தில் கல்வி அமைச்சுடன் இணைந்து சிறுவர்களுக்கு ஜப்பானிய மொழியை கற்பிப்பது தொடர்பான செயற்பாடுகள் தயாராகி வருவதாகவும். 5000 ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளர்களைக் கொண்ட குழுவை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.