வவுனியாவில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

வவுனியா காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (28.06) மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர் 23 வயதுடைய அயந்தன் என இனங்காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் பெற்றோர் இன்றுகாலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடுதிரும்பியிருந்தனர். இதன்போது குறித்த இளைஞர் எரிந்த நிலையில், சடலமாக கிடப்பதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Social Share

Leave a Reply