உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு!

அனைத்து அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளும் கைவசம் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹொரண பகுதியில் நேற்று (05.07) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஸ்ரீ சந்தரகுப்த இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி அவசர நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுக்கத் தயார் எனவும் 350 அத்தியவசிய ஒளடதங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுமார் 100 ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனக் கூறிய அவர், எவ்வாறிருப்பினும் ஒளடதங்கள் தங்களுக்கு தொடர்ச்சியாக கிடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply