யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (19.07) இரவு 09. 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முகங்களை மறைத்துக்கொண்டு, இரு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் வீட்டினுள் அத்துமீறி நுழைத்து, வீட்டை சேதப்படுத்தியுள்ளதுடன் அடித்து நொறுக்கி பெற்றோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தின்போது வீட்டில் இருந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 42 வயதுடைய பெண்ணொருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேலேகொண்டு வருகின்றனர்.