அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்று( 24.07) முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி வரை நடைபெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் மாதம் 18ம் முதல் 27ம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதனையடுத்து இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் 28ம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேநேரம் மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஒக்டோபர் மாதம் 30திகதி முதல் நவம்பர் 24 வரை முன்னெடுக்கப்படவுள்ளது.