பேருந்துகளில் பயணசீட்டு வழங்காவிட்டால் முறைப்பாடு செய்யுங்கள்!

பயணச்சீட்டு வழங்காத இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் மோசடிகளே நேரடி இழப்புகளுக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டிய அவர், அதனை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் வருவமானத்தில் ஒருபகுதியை சாரதிகளும், நடத்துனர்களும் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்த அவர், இது அன்றாட நடவடிக்கை எனவும் கூறியுள்ளார்.

இவ்வாறாக சுமார் 100 இலட்சம் ரூபாவை சாரதிகளும் நடத்துனர்களும் பகிர்ந்து கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் ஏறிய பின்னர் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளுமாறும், பயணச்சீட்டு கிடைக்காவிட்டால் புதிய முறைமையின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply