சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வர அனுமதி!

சீனாவின் ஷி யான் 6 ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீனா விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள் இந்த கப்பலுக்கு இடமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்தக் கப்பல் தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply