அம்பலாந்தோட்ட பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (07.09) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், ஓடும் பேருந்தை வழிமறித்து ஏறியதாகவும், பின்னர் அங்கிருந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.