இன்று (11.09) அதிகாலை 1.30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து 300 கிலோமீற்றர் வடகிழக்கு கடற்பரப்பில் 4.65 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.