இன்றைய வானிலை….!

நாட்டின் பலப்பகுதிகளில் இன்றும் (16.09) மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

திணைக்களத்தின் அறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல காலப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்பாடும் பாதிப்பை குறைத்துக்கொள்ள தேவாயன நடவடிக்கைகைள எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply