மன்னார் – கொழும்பு இடையில் புதிய ரயில் சேவை!

தலைமன்னாருக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் புதிய புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் சேவை தலைமன்னாரிலிருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு 10.34 மணிக்கு கோட்டை ரயில்நிலையத்தை வந்தடையும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பிற்பகல் 3.35 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு இரவு 10.48க்கு தலைமன்னார் புகையிரத நிலையத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் இரண்டு குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை பெட்டிகள் மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு சாதாரண பெட்டிகள் இருப்பதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply