காலியில் நேற்று (23.09) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லலித் பிரசாந்த மெண்டிஸ் என்ற வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.