பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை மீள ஸ்தாபிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கிலிருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இதற்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் வழக்கு முன்னெடுக்கப்பட்டபோதே இந்த விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக குறித்த வழக்கை தொடர்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.