இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (09.11) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் பலத்த இடி மின்னலுடன் கடும் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என எதிவுகூறப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply