இந்து பக்தர்களின் இதயங்களில் ஒளிமயமானதும் மகிழ்ச்சியும் நிரம்பிய தீபாவளியைக் கொண்டாடும் இலங்கை இந்து சமூகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! தீபாவளி திருநாளின் தீபங்கள் நம் இல்லத்தில் உள்ள இருளை நீக்கி, வெளிச்சம் கொடுப்பது போல், நம் இதயங்கள் அன்பு, கருணை, ஒற்றுமை ஆகிய உணர்வுகளால், உண்மையாகப் பிரகாசித்தால், தீபாவளிக் கொண்டாட்டம் மனிதாபிமானமாக இருக்கும் என்பது எது நம்பிக்கையாகும்.
இருளை ஒளியால் வெல்ல வேண்டும், தீமையை நன்மையால் வெல்ல வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் புறக்கணிப்பைக் களைய வேண்டும் என்ற நம்பிக்கையை ஒளியின் திருநாளான தீபாவளிக் கொண்டாட்டம் நம் அனைவருக்கும் கொண்டுவரும் நம்பிக்கைச் செய்தியாகும்.
ஒற்றுமை மற்றும் உண்மையின் பண்புகளை புதிய பரிமாணத்திற்கு உயர்த்தி இந்த தீபாவளி திருநாளில் நாம் பெறும் ஒளியின் மூலம் ஒருவருக்கொருவர் மற்றும் நீதிக்காக ஒரு சிறந்த எதிர்காலத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும். மோசடி, ஊழல், திருட்டு ஆகியவற்றை நிராகரித்து, உண்மைக்காகவும் நன்மைக்காகவும் நின்று, மக்களின் எதிர்காலத்திற்காக நேர்மையாகவும், உண்மையாகவும், மனிதப் பண்புடனும், பரிபூரண இதயசுத்தியுடனும் உழைக்கும் தலைவர்களிடமிருந்து நம் நாட்டின் அரசியலை ஒளிரச் செய்வதற்கு இந்தத் தீபாவளியின் தீபங்கள் காரணமாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் அனைவரும் வளமான எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கான சரியான பாதைக்கான வழிகாட்டியாக இந்த தீபாவளியின் தீபங்கள் விளக்கட்டும்!