இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.