அந்தமான் நிக்கோபார் தீவுகளை அண்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை சுற்றியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (16.11) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இது வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையில் மத்திய வங்கக் கடலில் நவம்பர் 16ம் திகதியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதுடன் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கவனமாக செயற்படுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.
இந்த கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.