மினுவாங்கொடை கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிக்கொண்டிருந்த நபர் மீது காவலாளி ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் 32 வயதுடையவர் எனவும் அவரும் அதே பகுதியில் வசிப்பவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டானைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.