இன்றும் பல இடங்களில் மழை!

சப்ரகமுவ, மத்யயம் மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மதியம் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மலை பெய்யும் சந்தர்பங்களில், மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply