பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்தும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட இந்த பணிபகிஷ்கரிப்பு 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும் என அஞ்சல் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நுவரெலியா மற்றும் கண்டியில் உள்ள அஞ்சல் நிலையங்களை விற்பனை செய்வதற்கு எதிராகவும் , 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த தொழிற்சங்கத்தினர் அஞ்சல் நிலையங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராக 2 நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது முன்னெடுக்கப்படும் பணிபகிஷ்கரிப்பில் அனைத்து அஞ்சல் ஊழியர்களும் இணைந்துகொண்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.