இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத முறையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்றைய தினம் குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது படகொன்றும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டதையடுத்து மயிலிட்டி துறைமுகத்தின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.