அஸ்வெசும நிதி திட்டத்தின் டிசம்பர் மாதத்துக்கான கொடுப்பனவுகள் வைப்பிடலிடப்பட்டுள்ளன.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 8,793 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த தொகை பதிவு செய்யப்பட்ட 14 லட்சத்து 10 ஆயிரத்து 64 அஸ்வெசும பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.