இந்து சமுத்திரத்தின் ஆழ்கடல் பகுதியில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (29.12) காலை இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நில நடுக்கங்களில், ஒன்று ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகுகளாகவும், இரண்டாவது 5.8 அலகுகளாகவும் பதிவானது.
எவ்வாறாயினும், இந்த நில அதிர்வுகளால் இலங்கைக்கு பாதிப்பில்லை எனவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.