உரத்தின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை..!

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உர மூடை ஒன்றின் விலையை 8500 ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது உர மூடையொன்று 12,000 முதல் 14,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் தோட்ட உரிமையாளர்கள் தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவது குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக, ஒரு ஏக்கரில் பறிக்கப்படும் தேயிலையின் நிறை 216 கிலோ கிராமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உரத்தின் விலையை குறைத்து விற்பனை செய்வதற்கு அரசுக்கு சொந்தமான இரு உர நிறுவனங்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply