இலங்கை தமிழரசு கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலையில் இன்று காலை இடம்பெறவுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், அந்த கட்சியின் பொது சபை உறுப்பினர்கள் 340 பேரும்; வாக்களிக்கவுள்ளனர்.
இரகசிய வாக்கெடுப்பின் தீர்வுகளுக்கமைய தெரிவாகும் புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளைபொறுப்பேற்பார் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.