சிவஞானம் ஸ்ரீதரனுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து..!

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவஞானம் ஸ்ரீPதரனுக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘‘தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுடைய சேவைக் காலத்தில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்’’ ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு கிழக்கு தமிழர்கள் மாத்திரமின்றி நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய தங்களின் பணி தொடர வேண்டும் என வாழ்த்துவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply