இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளன.
ஆராச்சிக்கட்டுவ ரஜகதளுவ ரோமன் கத்தோலிக்க பொது மயானத்தில் அவரது இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளன.
கடந்த 25ஆம் திகதி அதிகாலை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் ரக வாகனம், கொள்கலன் பார்வூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து காயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது, பாதுகாப்பு அதிகாரியும் றாகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
அத்துடன், வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியின் தொலைபேசி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.