இந்தியா, இங்கிலாந்து- இந்தியா துடுப்பாட்டம் நிறைவு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியா விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி தமது துடுப்பாட்டத்தை நிறைவு செய்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றுள்ளது. யஷாஸ்வி ஜய்ஷ்வால் 209 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அவரின் துடுப்பாட்டம் மூலமே இந்தியா அணி தப்பித்துள்ளது. ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எவரும் அரைச்சதத்தை கூட தொடவில்லை. சுப்மன் கில் 34 ஓட்டங்களையும், ராஜாத் படித்தர் 32 ஓட்டங்களையும் பெற்றனர். சொந்த நாட்டில் இந்தியா அணி பெற்றுக் கொண்ட இந்த ஓட்ட எண்ணிக்கை போதுமானதாக அமையவில்லை. குறிப்பாக இந்தியாவின் மத்திய வரிசை சரியாக செயற்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டேர்சன், சொஹைப் பஷீர், ரெஹான் அஹமட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

இரண்டு அணிகளுக்குமான ஐந்து போட்டிகளடங்கிய தொடரில் முதற் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் காணப்படுகிறது.

Social Share

Leave a Reply