நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் இன்று (22.02) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையற்ற வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.